கொரோனா பரவல் – மேலும் பல இலங்கையர்கள் நாடு திரும்பினர்
In இலங்கை December 23, 2020 6:56 am GMT 0 Comments 1400 by : Dhackshala

கொரோனா தொற்று பரவல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கியுள்ள 101 இலங்கையர்கள் இன்று (புதன்கிழமை) காலை நாட்டை வந்தடைந்தனர்.
அதன்படி, மாலைத்தீவு, இந்தியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இந்தோனேசியா மற்றும் கட்டார் ஆகிய நாடுகளிலிருந்து அவர்கள் அனைவரும் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு நாட்டை வந்தடைந்த அனைவருக்கும் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு பின்னர் அனைவரும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக அனுப்பப்பட்டுள்ளனர்.
இதனிடையே இன்றைய தினம் மேலும் 144 பேர் வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகைத்தரவுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.