கொரோனா மேலாண்மை மாநாட்டை நடத்தும் இந்தியா : 9 நாடுகளுக்கு அழைப்பு!
In இந்தியா February 18, 2021 3:05 am GMT 0 Comments 1187 by : Krushnamoorthy Dushanthini

கொரோனா நோய்த்தொற்று மேலாண்மை தொடர்பான பிராந்திய மாநாட்டை இந்தியா இன்று (வியாழக்கிழமை) நடத்துகிறது.
கொரோனா மேலாண்மை, அனுபவம், நல்ல நடைமுறைகள், முன்னோக்கிய பாதை’ என்ற தலைப்பிலான இம்மாநாட்டுக்கு தெற்காசிய பகுதியைச் சேர்ந்த 9 நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், பூடான், மாலைத்தீவு, நேபாளம், பாகிஸ்தான், இலங்கை, மொரீஷியஸ், செஷல்ஸ் ஆகிய நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் சுகாதார செயலாளர் தலைமை வகிக்கும் இந்த மாநாட்டுக்கு ஒவ்வொரு நாட்டில் இருந்தும் அதன் சுகாதார செயலாளர் மற்றும் கொரோனா மேலாண்மை தொழில்நுட்பக் குழுத் தலைவர் என தலா இருவர் அழைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.