கொரோனா வைரஸின் புதிய மாறுபாடு தீவிரமடைவதால் லண்டனில் ஆரம்ப பாடசாலைகள் மூடல்!
In இங்கிலாந்து January 2, 2021 10:20 am GMT 0 Comments 1833 by : Anojkiyan

கொரோனா வைரஸின் புதிய மாறுபாடு மிக வேகமாக பரவிவருவதால் லண்டனில் ஆரம்ப பாடசாலைகள் மீண்டும் மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
70 சதவீதம் வரை தொற்றுநோயான புதிய மாறுபாட்டால் தலைநகரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து லண்டன் ஆரம்ப பாடசாலைகளையும் அடுத்த வாரம் மூட அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
அத்துடன், தொற்றுநோய்களின் தொடக்கத்தில் கட்டப்பட்ட அவசர மருத்துவமனைகள் மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளன.
தலைநகரில் உள்ள அனைத்து ஆரம்ப பாடசாலைகளையும் மூடுமாறு கல்விச் செயலாளர் கவின் வில்லியம்சன் கோரியதையடுத்து இந்த அறிவிப்பு வருகிறது.
கடந்த நான்கு நாட்களாக 50,000க்கும் மேற்பட்ட புதிய தினசரி கொவிட்-19 தொற்றுகளுடன், தேசிய சுகாதார சேவை, நோயாளிகளின் எதிர்பார்ப்புக்கு விரைந்து வருவதாகவும், மேலும் படுக்கைகள் தேவைப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே 74,000க்கும் அதிகமான மக்களைக் கொன்று பொருளாதாரத்தை நசுக்கிய வைரஸின் புதிய அலையுடன் பிரித்தானியா போராடுகிறது.
உலகின் மிக மோசமான பாதிப்புக்குள்ளான நாடுகளில் ஒன்றான பிரித்தானியா கடந்த 24 மணித்தியாலத்தில், 53,285 தொற்றுகளையும் 613 புதிய இறப்புகளையும் பதிவு செய்துள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.