கொரோனா வைரஸ் : இரவுநேர கட்டுப்பாடுகளுக்கு மத்திய அரசின் முன் அனுமதியை பெற வேண்டும் என அறிவிப்பு!
In இந்தியா November 26, 2020 6:08 am GMT 0 Comments 1382 by : Krushnamoorthy Dushanthini

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த இரவு நேர கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் எடுக்கப்படின் மத்திய அரசின் முன் அனுமதியைப் பெற வேண்டும் என அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய உள்துறை அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாடு தொடர்பாக டிசம்பர் மாதம் முதலாம் திகதி செயற்படுத்த வேண்டிய நடைமுறைகள் குறித்து, அனைத்து மாநிலங்களுக்கும், மத்திய உள்துறை அமைச்சகம் புதிய நடைமுறைகளை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய உள்துறை வெளியிட்டுள்ள செய்தியில், “ தொடர்ந்து எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளால் நாடு முழுதும் வைரஸ் பாதிப்பு குறைந்துள்ளது.
அதே நேரத்தில் பண்டிகை காலம், குளிர்காலம் ஆரம்பமாகியுள்ள நிலையில் சில மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வைரஸ் பாதிப்பு திடீரென அதிகரித்துள்ளது.
இதையடுத்து வரும் டிசம்பர் முதலாம் திதகி முதல் 31ம் திகதிவரை கண்காணிப்பு, கட்டுப்பாட்டு மற்றும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். வைரஸ் பரவலைத் தடுக்க இரவு நேர கட்டுப்பாடு போன்ற நடவடிக்கைகளை எடுக்கலாம்.
அதே நேரத்தில் கட்டுப்பாடு பகுதியைத் தவிர மற்ற இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க மத்திய அரசின் முன் அனுமதியைப் பெற வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.