கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 369 பேர் பூரண குணம்!
In இலங்கை November 26, 2020 9:31 am GMT 0 Comments 1446 by : Dhackshala

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 369 பேர் பூரணமாக குணமடைந்து இன்று (வியாழக்கிழமை) வீடுகளுக்குத் திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் 15 ஆயிரத்து 816 பேர் இதுவரை பூரணமாக குணமடைந்துள்ளனர்.
நாட்டில் இதுவரையில் 21 ஆயிரத்து 469 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர்களில் 5 ஆயிரத்து 557 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான 96 பேர் இதுவரை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.