கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 425 பேர் பூரண குணம்
In இலங்கை January 17, 2021 10:24 am GMT 0 Comments 1396 by : Dhackshala

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 425 பேர் பூரண குணமடைந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளனர் என சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 45 ஆயிரத்து 171 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் இதுவரையில் 52 ஆயிரத்து 313 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர்களில் 6 ஆயிரத்து 886 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இதேவேளை, கொரோனா வைரஸ் காரணமாக நாட்டில் இதுவரையில் 256 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.