கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல்: மேலும் 406 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்தனர்
In இலங்கை November 27, 2020 10:03 am GMT 0 Comments 1543 by : Yuganthini
கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கிதவித்த 406 இலங்கையர்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை இன்று (வெள்ளிக்கிழமை) வந்தடைந்தனர்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து 153 பேர், கட்டாரிலிருந்து 50 பேர், அவுஸ்ரேலியாவிலிருந்து 191 பேர், ஜப்பானிலிருந்து 12 பேரே இன்று காலை 5 விமானங்களின் ஊடாக விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
இவ்வாறு வருகைதந்த அனைவருக்கும் பி.சி.ஆர்.பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, பின்னர் அனைவரும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக அனுப்பப்பட்டுள்ளதாகக் கட்டு நாயக்க விமானநிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.