கொரோனா வைரஸ்: மேலும் 415 பேர் குணமடைவு
In இலங்கை December 21, 2020 10:17 am GMT 0 Comments 1458 by : Jeyachandran Vithushan

இலங்கையில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 28 ஆயிரத்து 682 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் மேலும் 415 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.
இதுவரை கொரோனா தொற்று உறுதியாகியோரின் மொத்த எண்ணிக்கை 37 ஆயிரத்து 261 ஆக காணப்படுகின்றது.
இதில் 8 ஆயிரத்து 403 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவரும் அதேவேளை 438பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.
மேலும் இலங்கையில் கொரோனா தொற்றினால் இதுவரை 176 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.