கொலைச் சதித்திட்டம் பாரதூரமானது: கோட்டா
நாட்டின் முதல் பிரஜையான ஜனாதிபதிக்கு எதிராகவே கொலை சதித்திட்டம் தீட்டப்பட்டமை உண்மையாக இருந்தால் அது மிகவும் பாரதூரமானது. இந்த விடயம் தொடர்பில் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் உரிய முறையில் விசாரணை நடத்தி உண்மையை கண்டறிய வேண்டுமென முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
சவுதி அரேபியாவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு கொழும்பில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற விசேட நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
தான் பாதுகாப்புச் செயலாளராக இருந்த காலத்தில் புலனாய்வுப் பிரிவினர் சிறந்த முறையில் பணியாற்றியதாகவும், இப்போதும் அவ்வாறு செயற்பட்டால் உண்மையை கண்டறிய முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, தனது பாதுகாப்பினை அதிகரிக்குமாறு அரசாங்கத்திடம் எவ்வித கோரிக்கைகளையும் முன்வைக்கவில்லை எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.