கொளத்தூரில் இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு

சென்னை கொளத்தூரில் இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் உட்பட 13 மாநிலங்களில் இரண்டாம் கட்ட மக்களவை தேர்தல் நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
சினிமா பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், பொதுமக்கள் என பலரும் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர். தமிழகத்தில் காலை 11 மணி நிலவரப்படி 30.62 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
இந்தநிலையில் சென்னை கொளத்தூரில் காலையில் 2 மணி நேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டதால் இரவு 7 மணி வரை வாக்களிக்கும் நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக காலை 9 முதல் 11 மணி வரை வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.