கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் முன்னேற்றம்!
In வணிகம் March 5, 2018 9:30 am GMT 0 Comments 1718 by : Vithushagan

கொழும்பு பங்குச் சந்தையின் பரிவர்தனை நடவடிக்கைகள் இந்தாண்டில் சிறந்த முறையில் செயற்படுகின்றது என கொழும்பு பங்குச் சந்தையின் தலைமை நிறைவேற்று பணிப்பாளர் ராஜீவ பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார்.
பங்குச் சந்தை நிலவரங்கள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பங்குச் சந்தைக்கான வெளிநாட்டு உள்வாங்கல் 15 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமாக பதிவாகியுள்ளது அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த வருடத்தில் 53 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில, வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு முதலீட்டாளர்கள் மூலம் 112 பில்லியன் ரூபா முதலீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்த தொகை அதிகம் எனவும் தலைமை நிறைவேற்று பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.