கொவிட்-19: பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஏழு இலட்சத்து 50ஆயிரத்தைக் கடந்தது!

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஏழு இலட்சத்து 50ஆயிரத்தைக் கடந்தது.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, கனடாவில் மொத்தமாக ஏழு இலட்சத்து 53ஆயிரத்து 11பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 22ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை மொத்தமாக 19ஆயிரத்து 238பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், ஐந்தாயிரத்து 628பேர் பாதிக்கப்பட்டதோடு 144பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், 62ஆயிரத்து 447பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 849பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன், ஆறு இலட்சத்து 71ஆயிரத்து 326பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.