கொவிட்-19: பிரித்தானியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40 இலட்சத்தை நெருங்குகின்றது!
In இங்கிலாந்து February 11, 2021 5:50 am GMT 0 Comments 1419 by : Anojkiyan

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40 இலட்சத்தை நெருங்குகின்றது.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பிரித்தானியாவில் 39 இலட்சத்து 85ஆயிரத்து 161பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட ஐந்தாவது நாடாக விளங்கும் பிரித்தானியாவில், இதுவரை ஒரு இலட்சத்து 14ஆயிரத்து 851பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 18இலட்சத்து 51ஆயிரத்து 466பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் மூவாயிரத்து 164பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அத்துடன், இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து 20இலட்சத்து 18ஆயிரத்து 844பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.