கோடிகளில் பேரம் பேசுபவர்கள் தற்போது எதை கேட்டாலும் கொடுப்பார்கள் – சுமந்திரன்
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கோடிகளில் பேரம் பேசுபவர்கள் தற்போது எழுத்துமூலம் எதைக் கேட்டாலும் கொடுப்பார்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரான எம்.ஏ சுமந்திரன் தெரிவித்தார்.
நாட்டின் தற்போதைய அரசியல் நிலைதொடர்பில் ஆதவனின் செய்திச் சேவைக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அத்துடன், தமிழ் தேசிய கூட்டமைப்பு ஐக்கிய தேசிய கட்சிக்கு இதுவரையில் ஆதரவு வழங்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
கூட்டமைப்பு நாட்டின் ஜனநாயக விழுமியங்களுக்கே ஆதரவாக செயற்பட்டு வருவதாக எம்.ஏ சுமந்திரன் குறிப்பிட்டார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.