கோவையிலும் குண்டு வெடிக்குமென எச்சரிக்கை: தீவிர பாதுகாப்பு
In இந்தியா April 28, 2019 8:44 am GMT 0 Comments 2225 by : Yuganthini

இலங்கையை போன்று கோவையிலும் குண்டு வெடிக்குமென வெளியாகியுள்ள தகவலைத் தொடர்ந்து அப்பகுதியில் பொலிஸார் தீவிர பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை பொலிஸ் கட்டுப்பாட்டு அறைக்கு, நேற்று (சனிக்கிழமை) தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்திய சந்தேகநபர், “இலங்கை போன்று கோவையிலும் குண்டு வைக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் இன்னும் சிறிது நேரத்தில் குண்டு வெடிக்கும்” என கூறிவிட்டு துண்டித்துவிட்டார்.
அதனைத் தொடர்ந்து சென்னை பொலிஸார், உடனடியாக கோவை மாவட்ட பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
பின்னர் பொள்ளாச்சி ரயில் நிலையத்திற்கு உடனடியாக விரைந்த பொலிஸார், வெடிகுண்டு நிபுணர்களின் உதவியுடன் இன்று அதிகாலை 2 மணி முதல் 4 மணி வரை சோதனை நடத்தினார்கள். ஆனால் சந்தேகத்திற்கிடமாக எந்தப்பொருளும் மீட்கப்படவில்லை.
இந்நிலையில் சென்னை கட்டுப்பாட்டு அறைக்கு இவ்வாறு அழைப்பினை ஏற்படுத்தியவர் யார் என்பது குறித்து, பொலிஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.