சகல நன்மைகளும் அருளும் ராஜ மாதங்கி விரதம்

கலைகளில் தேர்ச்சி பெறவும், பதவி உயர்வு பெறவும், குரல் வளம் பெறவும் மாதங்கி தேவியை வணங்கலாம். நவ ஆவரண பூஜையும், குங்கும அபிஷேகமும் இவளுக்கு பிடித்தமானது. மதுரை மீனாட்சி, ராஜ மாதங்கியின் அம்சம் என்பதால், அவளை வணங்குவதே ராஜ சியாமளாவை வணங்குவது போல் ஆகும்.
சியாமளா நவரத்தின மாலை, சியாமளா ஆவரணம், மாதங்கி சகஸ்ர நாமம், சியாமளா தண்டகம், சியாமளா கவசம், மாதங்கி ஹிருதயம், ராஜ மாதங்கி மந்திரம், மாதங்கி ஸ்தோத்திரம், மாதங்கி ஸுமுகி கவசம், சியாமளா சகஸ்ர நாமம் போன்ற பல துதிகள் அன்னையின் புகழை போற்றுகின்றன.
அனைவரும் கலைகளில் தேர்ச்சி பெறவும், செல்வ வளம் பெறவும் அவதரித்தவள் அன்னை ராஜ மாதங்கி. அவளை வெள்ளிக்கிழமை தோறும் விரதம் இருந்து வணங்கினால் சகல நன்மைகளும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.