சட்டமா அதிபருக்கு கொரோனா தொற்று இல்லை!

சட்டமா அதிபருக்கு கொரோனா தொற்று இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியாவில் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கான உத்தியோகபூர்வ விடுதி திறப்பு விழாவில் கலந்து கொண்ட சட்டமா அதிபர் உட்பட அனைத்து அதிகாரிகளும் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், பரிசோதனை முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் அரச சட்டவாதி ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து சட்டமா அதிபர் திணைக்களத்திற்கான உத்தியோகபூர்வ விடுதி திறப்பு விழாவில் கலந்து கொண்ட பல்வேறு உயர் அதிகாரிகளிடமும் நேற்று முன்தினம் பிசீஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.