சட்டம், ஒழுங்கு அமைச்சராக சரத் பொன்சேகாவை நியமிக்க வேண்டும் – ஐ.தே.க
In இலங்கை April 28, 2019 9:32 am GMT 0 Comments 2220 by : Jeyachandran Vithushan

சட்டம் மற்றும் ஒழுங்கு தொடர்பான அமைச்சராக சரத் பொன்சேகாவை நியமிக்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுக்கப்படவுள்ளது.
அதன் பிரகாரம் நாளை (திங்கட்கிழமை) ஐக்கிய தேசிய கட்சியின் பின்வரிசை உறுப்பினர்கள் இது குறித்த கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளிக்கவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆசு மாரசிங்க தெரிவித்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதலை அடுத்தே நாடாளுமன்ற உறுப்பினர்களினால் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.