News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • மைத்திரி -மஹிந்த கூட்டணியை இறுதி செய்ய ஆறு பேர் கொண்ட குழு!
  • லிபரல் அரசாங்கத்தின் வரவு – செலவுத் திட்டம் மார்ச்சில்!
  • விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் ட்ரெய்லர்
  • இலங்கை – சீன உறவுகளை விரிவுபடுத்துவது குறித்து புதுடெல்லியில் பேச்சு!
  • முதலீடுகளை மேற்கொள்வதற்காக அமெரிக்காவுக்கு பகிரங்க அழைப்பு!
  1. முகப்பு
  2. இந்தியா
  3. சபரிமலை தீர்ப்பு வரவேற்கத்தக்கது: கமல்ஹாசன்

சபரிமலை தீர்ப்பு வரவேற்கத்தக்கது: கமல்ஹாசன்

In இந்தியா     September 29, 2018 4:25 am GMT     0 Comments     1482     by : Kemasiya

கடவுள் முன்னிலையில் அனைவரும் சமமானவர்கள் என்று கூறப்படும் நிலையில், ஐயப்பன் சபரிமலை ஆலயத்திற்கு அனைவரும் செல்லலாம் என விதிக்கப்பட்டுள்ள தீர்ப்பை வரவேற்பதாக, மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நேற்று (வெள்ளிக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த அவர் மேற்படி கூறியுள்ளார். வரலாற்று முக்கியத்துவம் மிக்க குறித்த தீர்ப்பு குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்-

“நான் இதுவரை கோயிலுக்குச் சென்றதில்லை. ஆனால் கடவுள் முன்னிலையில் அனைவரும் சமம் என்றபோது கோயிலுக்கும் அனைவரும் செல்லாம். ஆகவே உச்சநீதிமன்றம் விதித்துள்ள இந்த தீர்ப்பை நான் வரவேற்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

சபரிமலை ஐயப்பன் ஆலயத்திற்கு 12 முதல் 50 வயது வரையிலான பெண்கள் செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தீர்ப்பை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது.

குறித்த வழக்கு விசாரணையானது, கடந்த 12 வருடங்களாக ஐந்து பேர் கொண்ட அமர்வில் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதில், பெண்கள் மீதான பாகுபாடு நீண்டகாலமாக இருந்துவருகிறது. ஆனால் கடவுள் முன் ஆண், பெண் வேறுபாடு இல்லை. எனவே சபரிமலை ஆலயத்திற்குள் அனைவரும் செல்லலாம் எனத் தீர்ப்பளிக்கப்பட்டது.

இந்த தீர்ப்பை பெரும்பாலானோர் வரவேற்றுள்ள நிலையில், ஆலய நிர்வாகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இது சட்டவிரோதமான தீர்ப்பு என்றும், இதை எதிர்த்து மேன்முறையீடு செய்யவுள்ளதாகவும் ஆலய நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், தான் நாத்திகனாக இருந்தாலும் இத்தீர்ப்பு சிறந்ததென்ற ரீதியில் அதை வரவேற்பதாக கமல்ஹாசன் கூறியுள்ளார்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • ரஃபேல் தீர்ப்பு – பெப்ரவரி 26இல் மறுஆய்வு மனுக்கள் மீது விசாரணை!  

    ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் கடந்த ஆண்டு டிசம்பரில் வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக தாக்கல

  • கமல் தனித்து நிற்பது தவறான முடிவு – செல்லூர் ராஜு  

    எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளில் தனித்து நிற்க மக்கள் நீ

  • தேர்தலில் தனித்தே களமிறங்குவோம்- கமல்ஹாசன்  

    மக்கள் பலம் இருப்பதால் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தனித்தே களமிறங்கும் என்று அக்கட்சியின் தலைவரும்

  • கமல்ஹாசன் அறியாமையால் பேசுகிறார்! – உதயநிதி ஸ்டாலின்  

    கிராமசபைக் கூட்டத்தை தி.மு.க. பிரதிசெய்வதாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கூறியிருந்த நிலை

  • ஸ்டெர்லைட் ஆலையை திறக்கமுடியாது! – உச்ச நீதிமன்றம் (2ஆம் இணைப்பு)  

    ஸ்டெர்லைட் தொடர்பான மேன்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஆலையை திறக்க தடை விதித்து உத்தர


#Tags

  • உச்சநீதிமன்றம்
  • கமல்ஹாசன்
  • சபரிமலை தீர்ப்பு
  • தீபக்மிஸ்ரா
    பிந்திய செய்திகள்
  • மைத்திரி -மஹிந்த கூட்டணியை இறுதி செய்ய ஆறு பேர் கொண்ட குழு!
    மைத்திரி -மஹிந்த கூட்டணியை இறுதி செய்ய ஆறு பேர் கொண்ட குழு!
  • லிபரல் அரசாங்கத்தின் வரவு – செலவுத் திட்டம் மார்ச்சில்!
    லிபரல் அரசாங்கத்தின் வரவு – செலவுத் திட்டம் மார்ச்சில்!
  • விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் டிரைலர்
    விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் டிரைலர்
  • இலங்கை – சீன உறவுகளை விரிவுபடுத்துவது குறித்து புதுடெல்லியில் பேச்சு!
    இலங்கை – சீன உறவுகளை விரிவுபடுத்துவது குறித்து புதுடெல்லியில் பேச்சு!
  • முதலீடுகளை மேற்கொள்வதற்காக அமெரிக்காவுக்கு பகிரங்க அழைப்பு!
    முதலீடுகளை மேற்கொள்வதற்காக அமெரிக்காவுக்கு பகிரங்க அழைப்பு!
  • நீதிபதிகள் நியமனத்தில் தாமதத்திற்கு காரணம் கொலீஜியம் – தலைமை நீதிபதி
    நீதிபதிகள் நியமனத்தில் தாமதத்திற்கு காரணம் கொலீஜியம் – தலைமை நீதிபதி
  • அரசாங்கம் வழங்கிய வாக்குறுதி இன்னும் நிறைவேற்றவில்லை – மாவை!
    அரசாங்கம் வழங்கிய வாக்குறுதி இன்னும் நிறைவேற்றவில்லை – மாவை!
  • ரொறொன்ரோ போக்குவரத்துச் சபையின் வருமானத்தில் 61 மில்லியன் டொலர் இழப்பு!
    ரொறொன்ரோ போக்குவரத்துச் சபையின் வருமானத்தில் 61 மில்லியன் டொலர் இழப்பு!
  • பிரெக்ஸிற் ஒப்பந்தத்தை எட்டுவதற்கான பணிகள் துரிதகதியில் இடம்பெறுகின்றன: மே-யின் செய்தித்தொடர்பாளர்
    பிரெக்ஸிற் ஒப்பந்தத்தை எட்டுவதற்கான பணிகள் துரிதகதியில் இடம்பெறுகின்றன: மே-யின் செய்தித்தொடர்பாளர்
  • ஆசிய அரசியல் கட்சிகளின் செயளாலர் நாயகத்துடன் மஹிந்த பேச்சு!
    ஆசிய அரசியல் கட்சிகளின் செயளாலர் நாயகத்துடன் மஹிந்த பேச்சு!
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.