சம்மாந்துறை, கல்முனை, சவளக்கடை பகுதிகளுக்கு பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்
In இலங்கை April 29, 2019 12:42 pm GMT 0 Comments 2392 by : Jeyachandran Vithushan

கல்முனை, சம்மாந்துறை, சவளக்கடை பகுதிகளில் இன்று மாலை 6 மணி தொடக்கம் நாளை காலை 8 மணிவரைக்கும் மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கல்முனை, சாய்ந்தமருது பிரதேசத்தில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் 15ற்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததை அடுத்து தொடர்ச்சியாக பதற்றமான நிலைமை காணப்பட்டமையினால், வெள்ளிக்கிழமை இரவு முதல் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டது.
இந்த ஊரடங்கு சட்டம் நேற்றுமுன்தினம் காலை 10 மணிக்கு தளர்த்தப்பட்ட நிலையில் நேற்றும் 5 மணி முதல் இன்று (திங்கட்கிழமை) காலை வரை மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல் படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.