சர்வகட்சி மாநாட்டுக்கு ஜனாதிபதி அழைப்பு

நாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கும் நிலைமை மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சர்வகட்சி மாநாட்டுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
அந்த வகையில், நாளை (வியாழக்கிழமை) சர்வ கட்சி மாநாட்டினை கூட்டுவதற்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.
குறித்த மாநாடு, நாளை மு.ப.10.00 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்வுள்ளது.
அதேநேரம் சர்வ சமய கூட்டம் ஒன்றும் ஜனாதிபதியின் தலைமையில் நாளை பி.ப 4.00 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.