சர்வதேச அளவில் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும்போது ஒரே குரலில் ஒன்றுபட வேண்டும் – தினேஷ்
In இலங்கை February 17, 2021 4:04 am GMT 0 Comments 1242 by : Dhackshala

சர்வதேச அளவில் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும்போது அனைவரும் ஒரே குரலில் ஒன்றுபட வேண்டும் என்று வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன வலியுறுத்தினார்.
வெளிவிவகார அமைச்சகத்திற்கான ஆலோசனைக் குழுவில் உரையாற்றிய அமைச்சர், இலங்கையின் அண்டை நாடான இந்தியா உட்பட பல நாடுகள், உள்நாட்டில் வேறுபாடுகள் இருந்தபோதிலும் சர்வதேச தளங்களில் இருக்கும்போது ஒரே குரலில் தங்கள் நாட்டை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதன்படி, நாட்டின் வெளிவிவகாரக் கொள்கையை சர்வதேச அளவில் ஒரே தேசமாக பிரதிநிதித்துவப்படுத்துவதில் அனைத்து கட்சிகளும் ஒன்றுபடும் என்று அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.