சாகீர் கிராண்ட் பிரிக்ஸ்: செர்ஜியோ பெரெஸ் முதலிடம்
In விளையாட்டு December 7, 2020 6:42 am GMT 0 Comments 1533 by : Anojkiyan

பர்முயுலா-1 கார்பந்தயத்தின் பதின்ஆறாவது சுற்றான சாகீர் கிராண்ட் பிரிக்ஸ் பந்தயத்தில், ரேஸிங் பாய்ன்ட் அணியின் செர்ஜியோ பெரெஸ் முதலிடம் பிடித்துள்ளார்.
நடப்பு ஆண்டு ‘பார்முலா-1’ கார் பந்தயம், 19 சுற்றுகளாக நடைபெறுகின்றது. ஒவ்வொரு சுற்றும் ஒவ்வொரு நாடுகளில் நடைபெறுகின்றது.
இதன்படி, நடப்பு ஆண்டின் பதின்ஆறாவது சுற்றான சாகீர் கிராண்ட் பிரிக்ஸ், பஹ்ரைன் சர்வதேச ஓடுதளத்தில் நடைபெற்றது.
இதில் 307.995 கிலோ மீட்டர் பந்தய தூரத்தை நோக்கி, 10 அணிகளை சேர்ந்த 17 வீரர்கள் காரில் சீறிப்பாய்ந்தனர்.
இதில் ரேஸிங் பாய்ன்ட் அணியின் வீரரான செர்ஜியோ பெரெஸ், பந்தய தூரத்தை 1 மணித்தியாலம் 31 நிமிடங்கள் 15.114 வினாடிகளில் முதலிடத்தை பிடித்தார். இதற்காக அவருக்கு 25 புள்ளிகள் வழங்கப்பட்டது.
தொடர்ந்து ரெனோல்ட் அணியின் வீரரான எஸ்டீபன் ஓகான், 10.518 வினாடிகளில் பந்தயத்தூரத்தைக் கடந்து இரண்டாவது இடத்தை பிடித்தார். இதற்காக அவருக்கு 18 புள்ளிகள் வழங்கப்பட்டது.
இதனையடுத்து, 11.869 வினாடிகளில் பந்தயத்தூரத்தைக் கடந்து ரேஸிங் பாய்ன்ட் அணியின் மற்றொரு வீரரான லேன்ஸ் ஸ்ட்ரோல், மூன்றாவது இடத்தை பிடித்தார். இதற்காக அவருக்கு 15 புள்ளிகள் வழங்கப்பட்டது.
நடப்பு ஆண்டு பர்முயுலா-1 கார்பந்தயத் தொடரில் இதுவரை 16 சுற்றுகள் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், லீவிஸ் ஹாமில்டன் 11 வெற்றிகளுடன் 332 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.
இரண்டாவது இடத்தில் 205 புள்ளிகளுடன் மற்றொரு பென்ஸ் அணியின் வீரரான வால்டெரி போட்டாஸ் உள்ளார்.
ரெட்புல் அணியின் வீரரான மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் 189 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.
பர்முயுலா-1 கார்பந்தயத்தின் இறுதி சுற்றான அபுதாபி கிராண்ட் பிரிக்ஸ், எதிர்வரும் 13ஆம் திகதி யாஸ் மரினா சர்வதேச ஓடுதளத்தில் நடைபெறவுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.