News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • வடக்கிலிருந்து இராணுவம் வெளியேறுவதை தமிழ் மக்கள் விரும்பவில்லை: ஜி.எல்.பீரிஸ்!
  • துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர் குறித்து பொலிஸ் சந்தேகம் (2ஆம் இணைப்பு)
  • ஜம்மு காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கிய ஐவரும் மீட்கப்பட்டுள்ளனர்
  • கனிமொழியை எதிர்த்து தமிழிசை சௌந்தரராஜன் போட்டி!
  • கடற்படையினர் அச்சுறுத்துவதாக சிலாவத்துறை மக்கள் முறைப்பாடு
  1. முகப்பு
  2. இந்தியா
  3. சிதம்பரத்தை கைது செய்யும் தடை உத்தரவு நீடிப்பு!

சிதம்பரத்தை கைது செய்யும் தடை உத்தரவு நீடிப்பு!

In இந்தியா     November 1, 2018 10:22 am GMT     0 Comments     1332     by : Litharsan

முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோரை கைது செய்ய விதிக்கப்பட்ட தடை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

ஏயார்செல் – மேக்சிஸ் முறைகேடு தொடர்பில் அமுலாக்கத் துறை பதிவு செய்த வழக்கில் குறித்த இருவரையும் கைதுசெய்வதற்கான இடைக்காலத் தடை உத்தரவையே பட்டியாலா நீதிமன்றம் மேலும் நீடித்து இன்று (வியாழக்கிழமை) உத்தரவிட்டுள்ளது.

அந்தவகையில், எதிர்வரும் நவம்பர் 26 ஆம் திகதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2006 ஆம் ஆண்டில் மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்தபோது மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனமானம் ஏயார்செல் நிறுவனத்தில் ரூ.3,500 கோடிக்கு முதலீடு செய்தது.

இந்த முதலீடு, பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுவின் அனுமதி பெறாமல் மேற்கொள்ளப்பட்டதாகவும், இதற்கு கார்த்தி சிதம்பரம் உதவியதாகவும், அதற்கு பிரதிபலனாக அவரது நிறுவனங்களுக்கு இலஞ்சப் பணம் கைமாறியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பாக, கருப்பு பண தடுப்புச் சட்டத்தின்கீழ் அமுலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இவ்வழக்கில் கார்த்தி சிதம்பரம் மற்றும் அவருக்குச் சொந்தமானதாகக் கருதப்படும் இரு நிறுவனங்களின் ரூ.1.16 கோடி மதிப்பிலான சொத்துகளை அமுலாக்கத் துறையினர் கடந்த ஆண்டில் முடக்கினர்.

இதனிடையே, இவ்வழக்கில் கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக அமுலாக்கத் துறை கடந்த ஜூன் 13 இல் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது.

இந்த வழக்கு டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டுவருகின்றது. இதனிடையே ப.சிதம்பரம் மற்றும் அவரது மகனை கைது செய்வதற்கு இடைகால தடையை நீதிமன்றம் விதித்தது.

இத்தடை இன்றுடன் முடிவடைந்த நிலையில் எதிர்வரும் 26 ஆம் திகதி வரை நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • கர்நாடக இடைத்தேர்தலில் கிடைத்த வெற்றி விராட் கோலி பெற்ற வெற்றி போல் உள்ளது – ப.சிதம்பரம்!  

    கர்நாடக இடைத்தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி பெற்ற வெற்றி டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி பெற்ற வெற்றிபோல

  • பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை அறிவிக்கவில்லை: சிதம்பரம்  

    கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை காங்கிரஸ் கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லையென மு

  • ப. சிதம்பரத்தை கைது செய்ய விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை நீடிப்பு!  

    ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் மீத

  • வழக்குகளைச் சட்டரீதியாகச் சந்தித்து வெற்றி பெறுவேன்: கார்த்தி சிதம்பரம்!  

    என் மீது தொடரப்பட்டுள்ள வழக்குகளைச் சட்டரீதியாகச் சந்தித்து வெற்றி பெறுவேன் என கார்த்தி சிதம்பரம் தெ

  • கார்த்தி சிதம்பரத்திற்கு தொடர்ந்தும் விளக்கமறியல் (2ஆம் இணைப்பு)  

    ஐ.என்.எக்ஸ். ஊடக வழக்கில் சி.பி.ஐ. விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வந்த கார்த்தி சிதம்பரத்தை, தொடர்ந்து


#Tags

  • Chidambaram
  • Karthi Chidambaram
  • கார்த்தி சிதம்பரம்
  • பட்டியாலா நீதிமன்றம்
  • முன்னாள் மத்திய நிதியமைச்சர்
    பிந்திய செய்திகள்
  • துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர் குறித்து பொலிஸ் சந்தேகம் (2ஆம் இணைப்பு)
    துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர் குறித்து பொலிஸ் சந்தேகம் (2ஆம் இணைப்பு)
  • ஜம்மு காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கிய ஐவரும் மீட்கப்பட்டுள்ளனர்
    ஜம்மு காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கிய ஐவரும் மீட்கப்பட்டுள்ளனர்
  • கனிமொழியை எதிர்த்து தமிழிசை சௌந்தரராஜன் போட்டி!
    கனிமொழியை எதிர்த்து தமிழிசை சௌந்தரராஜன் போட்டி!
  • வடக்கில் முதற்தடவையாக இடம்பெறவிருக்கும் இதழியல் மாநாடு!
    வடக்கில் முதற்தடவையாக இடம்பெறவிருக்கும் இதழியல் மாநாடு!
  • இலங்கை – சிம்பாப்வேக்கு இடையில் விமான சேவை ஒப்பந்தம்!
    இலங்கை – சிம்பாப்வேக்கு இடையில் விமான சேவை ஒப்பந்தம்!
  • பெங்களூர் விமான கண்காட்சியில் தீ விபத்து: வாகனங்கள் எரிந்து நாசம்
    பெங்களூர் விமான கண்காட்சியில் தீ விபத்து: வாகனங்கள் எரிந்து நாசம்
  • காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களது போராட்டத்திற்கு பலரும் ஆதரவு
    காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களது போராட்டத்திற்கு பலரும் ஆதரவு
  • டோனி கூறிய ஆலோசனைகள் குறித்து மனம் திறந்த விஜய் சங்கர்!
    டோனி கூறிய ஆலோசனைகள் குறித்து மனம் திறந்த விஜய் சங்கர்!
  • உலக உலா (22.02.2019)
    உலக உலா (22.02.2019)
  • முதன்மைச் செய்திகள் (22.02.2019)
    முதன்மைச் செய்திகள் (22.02.2019)
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.