சிம்பாப்வேயை வயிட் வோஷ் செய்தது பங்களாதேஷ் அணி!

சிம்பாப்வே அணிக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரைக் பங்களாதேஷ் அணி, முழுமையாக கைப்பற்றியுள்ளது.
நேற்று (வெள்ளிக்கிழமை) சிட்டங்ஹொங் மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவதும், இறுதியுமான ஒருநாள் போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம், பங்களாதேஷ் அணி, தொடரைக் முழுமையாக கைப்பற்றியது.
இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
இதன்படி களமிறங்கிய சிம்பாப்வே அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 286 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
இதில் அணியின் அதிகபட்ச ஓட்டமாக சீன் வில்லியம்ஸ் ஆட்டமிழக்காது 129 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பந்து வீச்சில் நஸ்முல் இஸ்லாம் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனைதொடர்ந்து, 287 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய பங்களாதேஷ் அணி, 42.1 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதற்கமைய பங்களாதேஷ் அணி, 7 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.
இதன்போது அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக, சௌமியா சர்கார் 17 ஓட்டங்களையும், இம்ரூள் கெய்ஸ் 115 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
இந்த வெற்றியின் மூலம், பங்களாதேஷ் அணி ஒருநாள் தொடiர் 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியுள்ளது.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக சௌமியா சர்கார் தெரிவுசெய்யப்பட்டார். தொடரின் நாயகனாக இம்ரூள் கெய்ஸ் தெரிவுசெய்யப்பட்டார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.