சியோன் தேவாலய குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக அதிகரிப்பு!
In இலங்கை April 29, 2019 10:58 am GMT 0 Comments 1825 by : Jeyachandran Vithushan

மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளது.
குறித்த தாக்குதலை அடுத்து பலத்த காயங்களுக்குள்ளாகி, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த 35 வயதுடைய பெண் ஒருவர் இன்று (திங்கட்கிழமை) காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இதேவேளை நேற்று நாவற்குடாவைச் சேர்ந்த சுரங்க என்ற 39 வயதுடைய ஆண் ஒருவர் உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.
கடந்த 21ஆம் திகதி, நாட்டின் தேவாலயங்கள் உள்ளடங்களாக 9 பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை தாக்குதலில், 250 ற்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன் 300 ற்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில், வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.