News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் இராணுவம் மீண்டும் தாக்குதல்
  • பரிஸில் யெலோ வெஸ்ட் போராட்டம் அமைதியாக முன்னெடுப்பு
  • வடக்கு சீனாவில் உள்ள கனிம சுரங்கத்தில் விபத்து – 20 பேர் உயிரிழப்பு!
  • இந்தியா -பாகிஸ்தானுக்கு இடையிலான உறவுகளில் மேலும் விரிசல்: அமெரிக்க ஜனாதிபதி
  • டுபாய் பகிரங்க டென்னிஸ் – பெலின்டா பென்சிக் மகுடம் சூடினார்!
  1. முகப்பு
  2. உலகம்
  3. சிரியாவிலுள்ள ஈரான் இலக்குகள் மீது இஸ்ரேல் வான் தாக்குதல்!

சிரியாவிலுள்ள ஈரான் இலக்குகள் மீது இஸ்ரேல் வான் தாக்குதல்!

In உலகம்     January 21, 2019 3:55 am GMT     0 Comments     1372     by : krishan

சிரியாவில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள ஈரானின் இலக்குகளை தொடர்ச்சியாக தாக்குவதற்கு ஆரம்பித்துவிட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

ஈரானிய புரட்சிப் படையின் சிறப்பு பிரிவான குட்ஸ் படைக்கு எதிராக தங்களின் தாக்குதல் நடவடிக்கை அமைந்ததாக இஸ்ரேல் பாதுகாப்பு படை பிரிவு (IDF) குறிப்பிட்டுள்ளது. இது குறித்து மேலதிகமாக எந்த தகவலையும் இஸ்ரேல் ராணுவம் வௌியிடவில்லை.

நேற்றையதினம் (ஞாயிற்றுக்கிழமை) சிரியாவில் உள்ள கோலான் மலை பகுதியின் உச்சியில் உள்ள இலக்குகளில் இருந்து செலுத்தப்பட்ட ஒரு எறிகணையை தாங்கள் இடைமறித்ததாக இஸ்ரேல் பாதுகாப்பு படை பிரிவு தெரிவித்தது.

இதேவேளையில், தமது நாட்டின் வான் பாதுகாப்பு பிரிவு இஸ்ரேலின் வான்வழி தாக்குதல் ஒன்றை முறியடித்துள்ளதாக சிரியாவின் அரசு ஊடகமான சனா குறிப்பிட்டுள்ளது.

இந்தநிலையில், இன்று வெளியிடப்பட்ட டுவிட்டர் செய்தியில், ”சிரியா பிராந்தியத்தில் ஈரானை சேர்ந்த குட்ஸ் படைகளின் இலக்குகளை தாக்க ஆரம்பித்துவிட்டோம்” என்று தகவல் வெளியிட்டுள்ளது. இதனிடையே, நேற்றைய தினம் சாட் நாட்டுக்கு சென்றிருந்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹூ ஒரு எச்சரிக்கையை விடுத்திருந்தார்.

“சிரியாவில் மூர்க்கத்தனமாக செயற்பட்டுக்கொண்டிருக்கும் ஈரான் குழுவை இலக்காகக் கொள்ளவும், எங்கள் நாட்டுக்கு தீங்கு விளைவிக்கும் எவரையும் அழித்திடும் பணியில் ஈடுபடவும் நாங்கள் கொள்கை வகுத்துள்ளோம்” என்று அவர் தெரிவித்திருந்தார்.

டமஸ்கஸில் இந்த தாக்குதல் சம்பவத்தை கண்ட சில சாட்சிகள், இரவில் பலத்த வெடிப்பு சத்தங்கள் கேட்டதாக தெரிவித்தனர். இந்த தாக்குதல் சம்பவம் ஏற்படுத்தியுள்ள சேதங்கள் மற்றும் பாதிப்புகள் குறித்து இதுவரை முழுமையாக தகவல் வௌியிடப்படவில்லை.

இதுவரை சிரியாவில் நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து மிகவும் அரிதாகவே இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • சிரியாவில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வெளியேற்றம்!  

    சிரியாவில் இருந்து இறுதியாக ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வெளியேற்றும் முயற்சியில் குர்திஷ் தலைமையிலான பட

  • ஐ.எஸ்.-இற்கு எதிராக போரிட்ட சுவிஸ் முன்னாள் வீரருக்கு சிறைத்தண்டனை  

    சிரியாவில் ஐ.எஸ்.-இற்கு எதிராக போரிட்ட முன்னாள் இராணுவ வீரருக்கு சுவிட்சர்லாந்து இராணுவ நீதிமன்றம் ச

  • ஐ.எஸ் இல் இணைய முயற்சித்த கனேடியர் சிறையிலிருந்து விடுதலை  

    சிரியாவில் ஐ.எஸ். இயக்கத்தில் இணைந்துக் கொள்வதற்கு முயற்சித்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டிருந்த

  • ஐ.எஸ் தீவிரவாதிகளின் பிடியில் சிக்கியுள்ள 200 இற்கும் மேற்பட்ட குடும்பத்தினர்!  

    சிரியாவில் ஐ.எஸ் தீவிரவாதிகளின் பிடியில் 200 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் சிக்கியுள்ளதாக ஐக்கிய நாட

  • ஷமீமா பேகத்தின் பிரித்தானியக் குடியுரிமை நீக்கப்பட்டது  

    ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பில் இணைந்த 19 வயதான ஷமீமா பேகத்தின் பிரித்தானியக் குடியுரிமை உள்துறை அமைச்சினா


#Tags

  • இஸ்ரேல் வான் தாக்குதல்
  • ஈரானிய புரட்சிப் படை
  • ஈரான் இலக்குகள்
  • சிரியா
    பிந்திய செய்திகள்
  • ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் இராணுவம் மீண்டும் தாக்குதல்
    ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் இராணுவம் மீண்டும் தாக்குதல்
  • பரிஸில் யெலோ வெஸ்ட் போராட்டம் அமைதியாக முன்னெடுப்பு
    பரிஸில் யெலோ வெஸ்ட் போராட்டம் அமைதியாக முன்னெடுப்பு
  • டுபாய் பகிரங்க டென்னிஸ் – பெலின்டா பென்சிக் மகுடம் சூடினார்!
    டுபாய் பகிரங்க டென்னிஸ் – பெலின்டா பென்சிக் மகுடம் சூடினார்!
  • நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இருந்து முஷ்பிகுர் ரஹிம் விலகல்!
    நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இருந்து முஷ்பிகுர் ரஹிம் விலகல்!
  • பாரியளவிலான கொக்கேய்ன் போதைப்பொருளுடன் இருவர் கைது
    பாரியளவிலான கொக்கேய்ன் போதைப்பொருளுடன் இருவர் கைது
  • அரசியலமைப்பு பேரவை தொடர்பான மஹிந்தவின் குற்றச்சாட்டுக்கு பதில்
    அரசியலமைப்பு பேரவை தொடர்பான மஹிந்தவின் குற்றச்சாட்டுக்கு பதில்
  • போராட்ட வடிவத்தை மாற்ற கேப்பாப்புலவு மக்கள் ஆயத்தம்
    போராட்ட வடிவத்தை மாற்ற கேப்பாப்புலவு மக்கள் ஆயத்தம்
  • அதிரடியை வெளிக்காட்டிய ஆப்கானிஸ்தான் அணி 84 ஓட்டங்களால் வெற்றி!
    அதிரடியை வெளிக்காட்டிய ஆப்கானிஸ்தான் அணி 84 ஓட்டங்களால் வெற்றி!
  • மக்களின் போராட்டங்களை மலினப்படுத்தும் வகையில் ஆளுநர் பேசக்கூடாது – ரவிகரன்
    மக்களின் போராட்டங்களை மலினப்படுத்தும் வகையில் ஆளுநர் பேசக்கூடாது – ரவிகரன்
  • ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது அமர்வு நாளை மறுதினம்!
    ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது அமர்வு நாளை மறுதினம்!
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.