சிறைச்சாலைகளில் நெருக்கடியைக் குறைக்கும் திட்டம்- சட்டமா அதிபர் பணிப்புரை

சிறைச்சாலைகளில் நெருக்கடியைக் குறைக்கும் வகையிலான செயற்பாட்டுத் திட்டம் ஒன்றைத் தயாரிக்குமாறு சட்டமா அதிபர் தப்புலெ டி லிவேரா, பொலிஸ்மா அதிபர் சீ.டி.விக்ரமரத்னவிற்கு அறிவுறுத்தியுள்ளார்.
அத்துடன், இந்தச் செயற்பாட்டுத் திட்டத்தை எதிர்வரும் திங்கட்கிழமைக்கு முன்னதாக முன்வைக்குமாறு சட்டமா அதிபர் அறிவுறுத்தியுள்ளதாக சட்டமா அதிபரின் இணைப்புச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று பரவல் நிலைமையினால் சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளுக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்ற அடிப்படையில், சிறைச்சாலைகளில் கைதிகளின் எண்ணிக்கையைக் குறைக்குமாறு அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக, நடவடிக்கை எடுக்குமாறு சட்டமா அதிபர் ஏற்கனவே பொலிஸ்மா அதிபருக்கு அறிவுறுத்தல்களை விடுத்திருந்த நிலையில், இன்று இதுதொடர்பான செயற்பாட்டு அறிக்கையை தயாரிக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.