சிறைச்சாலைகளில் மாத்திரம் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா
In இலங்கை December 6, 2020 10:40 am GMT 0 Comments 1365 by : Dhackshala

சிறைச்சாலைகளில் மாத்திரம் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதற்கமைய சிறைச்சாலைகளில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 51 ஆக அதிகரித்துள்ளது.
குறித்த நபர்களுக்குள் 91 அதிகாரிகள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் தொற்றுக்கு உள்ளான அதிகாரிகள் 38 பேரும் கைதிகள் 562 பேரும் பூரண குணமடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.