Update – தப்பிச் சென்ற மஹர சிறைச்சாலை கைதி கண்டுபிடிக்கப்பட்டார்
In இலங்கை December 3, 2020 3:50 am GMT 0 Comments 1536 by : Dhackshala

ராகம வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் தப்பிச் சென்ற மஹர சிறைச்சாலை கைதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் ஒருகொடவத்தை பகுதியில் வைத்து அடையாளம் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறைச்சாலை மோதலில் காயமடைந்த கைதி வைத்தியசாலையில் இருந்து தப்பியோட்டம்
மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்ற நிலை காரணமாக காயமடைந்த நிலையில், ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த கைதி, அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த கைதி நேற்று (புதன்கிழமை) இரவு வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் அவரைத் தேடி விசேட முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.