சீனாவின் ஹைலோங்ஜியாங் மாகாணத்தில் அவசர நிலை பிரகடனம்!

கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுப் பரவல் தீவிரமடைந்ததையடுத்து சீனாவின் ஹைலோங்ஜியாங் மாகாணத்தில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் மிகவும் அத்தியாவசிய தேவை இருந்தால் மட்டுமே குடிமக்கள் வெளியே செல்ல வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த திடீர் அவசர நிலையால் 3.7 கோடி மக்கள் புதன்கிழமை முதல் தங்கள் குடியிருப்பிலேயே முடங்கி உள்ளனர்.
இதேபோல, நாட்டின் வடக்கு பிராந்தியங்களில் 2 கோடிக்கும் அதிகமான மக்கள் இப்போதும் ஒருவித ஊரடங்கு விதிகளின் கீழ் உள்ளனர்.
அண்மையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் பெரும்பாலானோருக்கு அறிகுறியில்லாத தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதனால், கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளநிலையில் அங்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.