சீன ஜனாதிபதியை சந்திக்கவுள்ளார் இந்திய பிரதமர்!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, சீன ஜனாதிபதி ஸீ ஜின்பிங்கை (Xi Jinping) சந்திக்கவுள்ளார்.
ஆப்கானிஸ்தான் தூதுவர்களுக்கான பயிற்சித்திட்ட தொடக்க விழாவில், இன்று (திங்கட்கிழமை) கலந்துகொண்டு பேசிய சீன தூதர் லுவோ ஜாஹோய் மேற்படி கூறியுள்ளார்.
இதன்போது, “அடுத்த மாதம் இடம்பெறவுள்ள ஜீ 20 உச்சிமாநாட்டில் இரு நாட்டு தலைவர்களும் சந்திப்பார்கள்” என, சீன தூதர் தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுக்குமிடையே டோக்லாம் விவகாரத்தில் விரிசல் இருப்பினும், பொருளாதார ரீதியில் நாட்டை கட்டியெழுப்ப வேண்டும் என்ற நோக்கத்தில் இரு நாட்டு உறவும் பேணப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அடுத்த மாதம் இடம்பெறவுள்ள சந்திப்பில், பொருளாதாரம் தொடர்பான பல்வேறு விடயங்கள் ஆலோசிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.