சீன நிலக்கரிச் சுரங்க விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்வு!

சீனாவின் பல பகுதிகளில் அனுமதிப் பத்திரங்கள் அற்ற நிலக்கரிச் சுரங்கங்கள் உரிய பாதுகாப்பு அம்சங்களை கடைபிடிக்காமல் செயற்பட்டு வருகின்றன.
இதன்காரணமாக, அடிக்கடி ஏற்படும் விபத்துகள் காரணமாக பல தொழிலாளர்கள் உயிரிழக்க நேரிடுகின்றது,
இந்த நிலையில், நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள ஷாங்டாங் மாகாணத்துக்கு உட்பட்ட நிலக்கரி சுரங்கமொன்றில் கடந்த 20-ம் திகதி மிகப்பெரிய பாறை ஒன்று வெடித்துச் சிதறியது.
இதனால், அந்த சுரங்கத்துக்குள் செல்லும் இரண்டு நுழைவாயில்களும் மூடிக்கொண்டன. இந்த இடிபாடுகளுக்குள் சிக்கி முன்னதாக 11 பேர் உயிரிழந்திருந்தனர்.
மூடப்பட்ட நுழைவு வாயில்களில் இருந்த இடிபாடுகள் நீக்கப்பட்டு உள்ளே சென்ற மீட்பு படையினர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மேலும் இரு சடலங்களை கண்டெடுத்துள்ளனர். இதைதொடர்ந்து, இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.