சீயோன் தேவாலய குண்டுத்தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு
In இலங்கை April 29, 2019 4:42 am GMT 0 Comments 2473 by : Yuganthini
மட்டக்களப்பு- சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த மற்றுமொருவர் உயிரிழந்துள்ளார்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த, நாவற்குடாவினை சேர்ந்த சுரங்க என்பவரே சிகிச்சை பலனின்றி நேற்று (ஞாயற்றுக்கிழமை) உயிரிழந்துள்ளார்.
இந்த உயிரிழப்பின் ஊடாக மட்டக்களப்பு சியோன் தேவாலயத் தாக்குதலில் உயிரிழந்தோர் தொகை 27ஆக உயர்வடைந்துள்ளது.
இலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்புச் சம்பவங்களில் 253 பேர் உயிரிழந்திருந்ததுடன் 500க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.