சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கு கொரோனா தொற்று!
In ஆசிரியர் தெரிவு January 23, 2021 3:33 am GMT 0 Comments 1704 by : Jeyachandran Vithushan
சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பி.பி.சி. சிங்கள ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கு மேற்கொள்ளப்பட்ட அன்ரிஜன் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து அமைச்சர் தற்போது தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஆயுர்வேத மருத்துவர் தம்மிக்க பண்டாராவின் கொரோனா பாணியை, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி அண்மையில் அருந்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த விவகாரம் குறித்து சுகாதார அமைச்சு இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.