செக் குடியரசில் கொவிட்-19 தொற்றிலிருந்து ஆறு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் மீண்டுள்ளனர்!

செக் குடியரசில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றிலிருந்து ஆறு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பூரண குணமடைந்துள்ளனர்.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து ஆறு இலட்சத்து 73பேர் குணமடைந்துள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 21ஆவது நாடாக விளங்கும் செக் குடியரசில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றினால், ஏழு இலட்சத்து 32ஆயிரத்து 22பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 11ஆயிரத்து 711பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 13ஆயிரத்து 274பேர் பாதிக்கப்பட்டதோடு, 62பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால், ஒரு இலட்சத்து 20ஆயிரத்து 238பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 865பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.