சேரனின் ‘ஆட்டோகிராஃப் 2’ திரைப்படத்தின் அறிவிப்பு
In சினிமா May 7, 2019 6:38 am GMT 0 Comments 1635 by : adminsrilanka

தயாரிப்பாளரும் இயக்குநரும் நடிகருமான சேரனின் ‘ஆட்டோகிராஃப் 2’ திரைப்படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சேரன் இயக்கத்தில் அவர் நடித்து 2004இல் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிய ஆட்டோகிராஃப் திரைப்படமானது பாடசாலை, கல்லூரி மற்றும் வேலைக்கு சென்ற பிறகு ஏற்படும் மூன்று பருவ காதலை உணர்வுபூர்வமாக சித்தரித்திருந்தது.
அந்தவகையில் இதன் இரண்டாம் பாகத்தை எடுக்கப் போவதாக இயக்குநர் சேரன் தற்போது அறிவித்துள்ளார். இந்தப் படத்துக்கான பணிகள் விரைவில் தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆட்டோகிராஃப் முதல்பாகத்தில், கதாநாயகியாக அறிமுகமான கோபிகா பின்னர் முன்னணி நடிகையாக உயர்ந்தார். சினேகா, மல்லிகா ஆகியோரும் இத்திரைப்படத்தில் நடித்திருந்தார்கள்.
இத்திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ஒவ்வொரு பூக்களுமே’ என்ற பாடலை எழுதிய பா.விஜய்க்கும், பாடிய சித்ராவுக்கும் தேசிய விருதுகள் கிடைத்தன. இதேபோல் ஞாபகம் வருதே ஞாபகம் வருதே என்ற பாடலுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.