ஜனாதிபதியை ஒரு போதும் தனிமைப்படுத்தமாட்டோம் – ரோஹித அபேகுணவர்தன

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஒரு போதும் தனிமைப்படுத்தமாட்டோம் என நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று(திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தினை அரசாங்கம் நிரூபித்த பின்னர் ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் பாரிய பிளவுகள் ஏற்படும்.
கட்சியின் தலைமைத்துவத்திற்காக கட்சிக்குள்ளே பாரிய நெருக்கடி ஏற்படும். பொதுஜன பெரமுனவும், ஸ்ரீலங்கா சுதந்திர முன்னணியும் ஒன்றினைந்தே தற்போது அரசியல் ரீதியில் புதிய மாற்றத்தினை ஏற்படுத்தியுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஒரு போதும் தனிமைப்படுத்தமாட்டோம். ஒன்றிணைத்தே எதிர்வரும் தேர்தல்களை எதிர்கொள்வோம்’ என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.