News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • பாரியளலவிலான கொக்கேய்ன் போதைப்பொருளுடன் இருவர் கைது
  • அரசியலமைப்பு பேரவை தொடர்பான மஹிந்தவின் குற்றச்சாட்டுக்கு பதில்
  • போராட்ட வடிவத்தை மாற்ற கேப்பாப்புலவு மக்கள் ஆயத்தம்
  • அதிரடியை வெளிக்காட்டிய ஆப்கானிஸ்தான் அணி 84 ஓட்டங்களால் வெற்றி!
  • மக்களின் போராட்டங்களை மலினப்படுத்தும் வகையில் ஆளுநர் பேசக்கூடாது – ரவிகரன்
  1. முகப்பு
  2. ஆசிரியர் தெரிவு
  3. ஜனாதிபதி வெளியிட்ட கருத்து திரிபுபடுத்தப்பட்டுள்ளது – இந்திய பிரதமர் அலுவலகம்!

ஜனாதிபதி வெளியிட்ட கருத்து திரிபுபடுத்தப்பட்டுள்ளது – இந்திய பிரதமர் அலுவலகம்!

In ஆசிரியர் தெரிவு     October 18, 2018 3:19 am GMT     0 Comments     1585     by : Benitlas

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் வெளியிட்டக் கருத்து திரிபுப்படுத்தப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ரவீஷ் குமார் இதனை தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் இதுதொடர்பில் நேற்றைய தினம்(புதன்கிழமை) தொலைபேசி உரையாடல் இடம்பெற்றதுடன், இதன்போது இந்த விடயம் குறித்து இருவரும் தெளிவுப்படுத்திக் கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, குறித்த விடயம் தொடர்பில் இந்திய பிரதமர் நரேந்திரமோடியின் அலுவலகத்தினால் ஊடக அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

இதில், இலங்கை ஜனாதிபதி மற்றும் இந்திய பிரதமர் ஆகியோருக்கு இடையில் முரண்பாட்டை தோற்றுவிக்கும் வகையிலும், இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவை பாதிக்கும் நோக்கிலும் குறித்த செய்தி வெளியிடப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன் அந்த செய்தி முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என்றும் இந்திய பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, ஜனாதிபதியை படுகொலை செய்ய மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் சதி முயற்சியில் இந்திய உளவுத்துறையின் எந்தவொரு ஈடுபாடு குறித்தும் ஜனாதிபதி இதன்போது கருத்து தெரிவிக்கவில்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புவதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • வாக்குறுதியை நிறைவேற்றாத மோடி ஆந்திராவுக்குள் நுழைய கூடாது: சந்திரபாபு நாயுடு  

    மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றாமல் பிரதமர் நரேந்திர மோடி, ஆந்திராவுக்குள் நுழைய முடியாதென

  • வேட்பாளராக மோடி அறிவிக்கப்பட்டால் அ.தி.மு.க படுதோல்வியை சந்திக்கும்: நாராயணசாமி  

    பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டால், நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க தலைமையிலான கூட்டண

  • தாக்குதலை கவனத்தில் கொள்ளாமல் படப்பிடிப்பு நடவடிக்கையிலேயே மோடி தீவிரம்: ராகுல்  

    புல்வாமா தாக்குதலால் முழு நாடும் பதற்றத்தில் இருந்தபோது, பிரதமர் நரேந்திர மோடி எதனையும் கவனத்தில் கொ

  • இராணுவ வீரர்களை தண்டிக்க ஒருபோதும் இடமளிக்கமாட்டேன்: ஜனாதிபதி  

    இறுதி யுத்தத்தின்போது இராணுவ வீரர்கள் போர்க்குற்றத்தில் ஈடுபடவில்லை. ஆகையால் அவர்களை தண்டிப்பதற்கு ஒ

  • சிறுவர்களின் பாதுகாப்பிற்காக தேசிய நிதியம் – ஜனாதிபதி  

    சிறுவர்களின் பாதுகாப்பிற்காக தேசிய நிதியமொன்றை ஸ்தாபிக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவி


#Tags

  • இந்திய பிரதமர் அலுவலகம்
  • இந்திய வெளிவிவகார அமைச்சு
  • ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன
  • மைத்திரி
  • மோடி
  • ரவீஷ் குமார்
    பிந்திய செய்திகள்
  • பாரியளலவிலான கொக்கேய்ன் போதைப்பொருளுடன் இருவர் கைது
    பாரியளலவிலான கொக்கேய்ன் போதைப்பொருளுடன் இருவர் கைது
  • அரசியலமைப்பு பேரவை தொடர்பான மஹிந்தவின் குற்றச்சாட்டுக்கு பதில்
    அரசியலமைப்பு பேரவை தொடர்பான மஹிந்தவின் குற்றச்சாட்டுக்கு பதில்
  • போராட்ட வடிவத்தை மாற்ற கேப்பாப்புலவு மக்கள் ஆயத்தம்
    போராட்ட வடிவத்தை மாற்ற கேப்பாப்புலவு மக்கள் ஆயத்தம்
  • அதிரடியை வெளிக்காட்டிய ஆப்கானிஸ்தான் அணி 84 ஓட்டங்களால் வெற்றி!
    அதிரடியை வெளிக்காட்டிய ஆப்கானிஸ்தான் அணி 84 ஓட்டங்களால் வெற்றி!
  • மக்களின் போராட்டங்களை மலினப்படுத்தும் வகையில் ஆளுநர் பேசக்கூடாது – ரவிகரன்
    மக்களின் போராட்டங்களை மலினப்படுத்தும் வகையில் ஆளுநர் பேசக்கூடாது – ரவிகரன்
  • ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது அமர்வு நாளை மறுதினம்!
    ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது அமர்வு நாளை மறுதினம்!
  • T-20 போட்டியில் 278 ஓட்டங்களை எடுத்து ஆப்கானிஸ்தான் அணி உலக சாதனை!
    T-20 போட்டியில் 278 ஓட்டங்களை எடுத்து ஆப்கானிஸ்தான் அணி உலக சாதனை!
  • மீண்டும் தமிழுக்கு வரும் அஜித், விக்ரம் பட நாயகி
    மீண்டும் தமிழுக்கு வரும் அஜித், விக்ரம் பட நாயகி
  • வர்த்தகர்கள் கொலை – எதிர்ப்பு போராட்டம் கைவிடப்பட்டது!
    வர்த்தகர்கள் கொலை – எதிர்ப்பு போராட்டம் கைவிடப்பட்டது!
  • உலக சாரணியர் தினம் அனுஷ்டிப்பு
    உலக சாரணியர் தினம் அனுஷ்டிப்பு
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.