News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • இந்தியா – ஆர்ஜன்டீனாவிற்கு இடையில் 10 ஒப்பந்தங்கள் கைச்சாத்து (2ஆம் இணைப்பு)
  • சுதந்திர தனிநாடு கோரி மீண்டும் ஆர்ப்பாட்டம்!
  • கூட்டமைப்பு முன்மொழியும் நல்லிணக்கத்தை ஏற்க மாட்டோம் – ஜீ.எல்.பீரிஸ்
  • வரவு – செலவு திட்டம் வறுமையை அடிப்படையாக கொண்டது – நிதி அமைச்சர்!
  • பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தொடர்பாக விசேட கலந்துரையாடல்
  1. முகப்பு
  2. உலகம்
  3. கஷோக்கி கொலையுடன் தொடர்புடையவர்களை தண்டிப்பது உறுதி : சவுதி இளவரசர்

கஷோக்கி கொலையுடன் தொடர்புடையவர்களை தண்டிப்பது உறுதி : சவுதி இளவரசர்

In உலகம்     October 24, 2018 4:14 pm GMT     0 Comments     1464     by : shiyani

ஊடகவியலாளர் ஜமால் காஷோக்கி கொல்லப்பட்டதற்கு காரணமான அனைத்துக் குற்றவாளிகளும் நிச்சயமாகத் தண்டிக்கப்படுவார்களென ரியாத்தில் நடைபெற்றுவரும் முதலீட்டு மாநாட்டில் பேசிய சவுதி இளவரசர் சபதம் செய்துள்ளார்.

மேலும் இக்கொலை சவுதிமக்கள் அனைவருக்கும் மிகவும் வேதனையான சம்பவமெனவும் எனினும் சவுதிக்கும் துருக்கிக்கு இடையேயான உறவில் எவ்வித பிளவுகளும் ஏற்பட அனுமதிக்கப் போவதில்லையெனவும் இளவரசர் மொஹம்மட் பின் சல்மான் தெரிவித்துள்ளார்.

இஸ்தான்புல்லில் அமைந்துள்ள சவுதி தூதரகத்தில் கஷோக்கி கொல்லப்பட்டதாக சவுதி அரசு ஒப்புக் கொண்டதன் பின்னர் இளவரசரால் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்ட முதல் கருத்துக்கள் இவையாகும்,.

இந்தக் கொலை நியாயப்படுத்தமுடியாத ஒரு கொடூரமான குற்றம் என்றும் ஆரம்பத்திலிருந்தே துருக்கியின் விசாரணைகளுக்கு சவுதி முழு ஒத்துழைப்பு வழங்கிவருவதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன் இந்தச் சம்பவத்தை காரணம் காட்டி யாரேனும் துருக்கிக்கும் சவுதிக்கும் இடையிலான நல்லுறவை குலைப்பதற்கு நினைத்தால் அதற்கு தான் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லையெனவும் இளவரசர் கூறினார்.

நேற்று சவுதி அரேபிய மன்னர் சல்மானும் அவரது மகன் இளவரசர் மொஹம்மட் பின் சல்மானும், ஜமால் கஷோக்கியின் குடும்பத்தினரை சந்தித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • கஷோக்கி கொலை விசாரணையை தீவிரப்படுத்துக: அமெரிக்காவிடம் துருக்கி கோரிக்கை  

    ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி கொலை தொடர்பான விசாரணைகளுக்கு அழுத்தம் கொடுக்குமாறு அமெரிக்காவை, துருக்கி வ

  • சவுதி இளவரசர் பாகிஸ்தானுக்கு வர முன்னர் 5 ட்ரக்குகளில் வந்திறங்கிய பயன்பாட்டு பொருட்கள்!  

    சவுதி அரேபியாவின் இளவரசர் முகமது பின் சல்மான் இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமாக இஸ்லாமாபாத்திற்கு

  • ஜமால் கஷோக்கி கொலை விவகாரம் : முதல்கட்ட ஆய்வறிக்கை!  

    சவுதி அரேபிய ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கியின் படுகொலை பற்றி விசாரிக்கும், துருக்கியின் திறனை சவுதி அரேப

  • ஊடகவியலாளர் கஷோக்கி படுகொலை: ஐ.நா. அறிக்கை ஜுன் மாதம் சமர்ப்பிக்கப்படும்  

    ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி படுகொலை தொடர்பான ஐ.நா. விசாரணை அறிக்கை எதிர்வரும் ஜுன் மாதம் வெளியிடப்படவு

  • கஷோக்கி படுகொலை: ஐ.நா.வின் விசாரணை ஆரம்பம்  

    ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி படுகொலை விவகாரம் தொடர்பாக ஆராயும் ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு வார பணி துருக


#Tags

  • Jamal Khashoggi
  • The Saudi crown prince
  • சவுதி இளவரசர்
  • ஜமால் கஷோக்கி
    பிந்திய செய்திகள்
  • சுதந்திர தனிநாடு கோரி மீண்டும் ஆர்ப்பாட்டம்!
    சுதந்திர தனிநாடு கோரி மீண்டும் ஆர்ப்பாட்டம்!
  • வரவு – செலவு திட்டம் வறுமையை அடிப்படையாக கொண்டது – நிதி அமைச்சர்!
    வரவு – செலவு திட்டம் வறுமையை அடிப்படையாக கொண்டது – நிதி அமைச்சர்!
  • பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தொடர்பாக விசேட கலந்துரையாடல்
    பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தொடர்பாக விசேட கலந்துரையாடல்
  • பாகிஸ்தான் இராணுவ தொடரணி மீது தாக்குதல் – 9 பேர் உயிரிழப்பு 11 பேர் காயம்!
    பாகிஸ்தான் இராணுவ தொடரணி மீது தாக்குதல் – 9 பேர் உயிரிழப்பு 11 பேர் காயம்!
  • ஜெரெமி கோர்பினுடன் கருத்து வேறுபாடு : கட்சி உறுப்பினர்கள் விலகல்!
    ஜெரெமி கோர்பினுடன் கருத்து வேறுபாடு : கட்சி உறுப்பினர்கள் விலகல்!
  • 7 குழந்தைகளை ஒரே நேரத்தில் பிரசவித்த அதிசய சம்பவம்
    7 குழந்தைகளை ஒரே நேரத்தில் பிரசவித்த அதிசய சம்பவம்
  • மனிதன் மனிதனாக இருப்பதற்குக் காரணம் திருமணம் – தம்பி ராமையா
    மனிதன் மனிதனாக இருப்பதற்குக் காரணம் திருமணம் – தம்பி ராமையா
  • மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய ஆசிரியருக்கு விளக்கமறியல்
    மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய ஆசிரியருக்கு விளக்கமறியல்
  • இராணுவம் போர்க்குற்றத்தை இழைக்கவில்லை – அரசாங்கம்!
    இராணுவம் போர்க்குற்றத்தை இழைக்கவில்லை – அரசாங்கம்!
  • வவுனியா நாகபூசணி அம்பாள் ஆலய இரதோற்சவம்
    வவுனியா நாகபூசணி அம்பாள் ஆலய இரதோற்சவம்
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.