News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • பிரித்தானியாவில் தஞ்சம் கோரும் இலங்கையர் விடயத்தில் திடீர் திருப்பம் – நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு வெளியானது!
  • தெற்காசிய பிராந்திய தூய்மைப்படுத்தல் மாநாடு இம்முறை இலங்கையில்!
  • சூனியக்காரிகளின் முத்திரைகள் அடங்கிய குகைகள் கண்டுபிடிப்பு!
  • புல்வாமா தாக்குதல் சம்பவம்: மம்தா தலைமையில் அமைதிப் பேரணி
  • மைத்திரி தம்முடன் இணைந்தமைக்கான காரணத்தை வெளியிட்டார் மஹிந்தர்!
  1. முகப்பு
  2. அமொிக்கா
  3. ஜமால் கஷோக்கி கொலை செய்யப்பட்டிருந்தால் சவுதி அதற்கான விளைவுகளை சந்திக்கும் – ட்ரம்ப்

ஜமால் கஷோக்கி கொலை செய்யப்பட்டிருந்தால் சவுதி அதற்கான விளைவுகளை சந்திக்கும் – ட்ரம்ப்

In அமொிக்கா     October 19, 2018 4:09 am GMT     0 Comments     1435     by : krishan

துருக்கியில் வைத்து காணாமல் போன சவுதி அரேபிய ஊடகவியலாளர், கொலை செய்யப்பட்டிருந்தால் அதற்கான விளைவுகளை அந்த நாடு சந்திக்கும் என அமெரிக்கா ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ஜமால் கசோக்கி என்ற ஊடகவியலாளர் கடந்த இரண்டாம் திகதி முதல் மாயமாகியுள்ள நிலையில், அவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், சம்பவம் தொடர்பில் நேற்று மாலை ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமெரிக்க ஜனாதிபதி, “ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அப்படி நடந்திருந்தால் அது மிகவும் துயரமானது. சவுதி அரேபியா அதற்கு ஈடாக கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்.

சவுதி மன்னர் சல்மானின் ஆட்சியை கடுமையாக விமர்சித்து வந்த அந்த நாட்டை சேர்ந்த ஊடகவியலாளர் ஜமால் கசோக்கி கடந்த இரண்டாம் திகதி மாயமானார்.

அவர், இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி அரேபிய துணை தூதரகத்துக்கு சென்ற போதே மாயமானதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதனை அடுத்து அவர் தூதரகத்துக்குள் வைத்து சவுதி அரேபிய அதிகாரிகளால் கொலை செய்யப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஆனால், இந்தக் குற்றச்சாட்டை இதுவரை சவுதி அரேபியா மறுத்து வரும் நிலையில், இது ஆதாரமற்றது எனவும் கூறி வருகின்றது. இந்த நிலையில் ஊடகவிளலாளர் ஜமால் கஷோக்கி காணாமல் போனமை தொடர்பாக சவுதி மன்னர் சல்மான் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதற்கிடையே சவுதி அரேபிய அதிகாரிகளின் அனுமதி பெற்று, துருக்கி பொலிஸார் இஸ்தான்புல் துணைத்தூதரகத்துக்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் ஜமால் கஷோக்கி என்ற ஊடகவியலாளர் கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி அரசாங்கம் தெரிவித்துள்ளது. அது தொடர்பான காணொளி ஒன்றையும் துருக்கி அரச ஊடகம் வெளியிட்டுள்ளது.

இவ்வாறான நிலைமையில் மாயமான ஊடகவியலாளர் கொலை செய்யப்பட்டிருந்தால் அதற்கான விளைவுகளை சவுதி அரேபியா சந்திக்கும் என அமெரிக்கா ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்


#Tags

  • journalist Khashoggi is dead
  • Trump says 'certainly looks'
    பிந்திய செய்திகள்
  • சூனியக்காரிகளின் முத்திரைகள் அடங்கிய குகைகள் கண்டுபிடிப்பு!
    சூனியக்காரிகளின் முத்திரைகள் அடங்கிய குகைகள் கண்டுபிடிப்பு!
  • பிரிட்டிஷ் கொலம்பியாவில் துப்பாக்கிச் சூடு – இருவர் படுகாயம்!
    பிரிட்டிஷ் கொலம்பியாவில் துப்பாக்கிச் சூடு – இருவர் படுகாயம்!
  • பேட்ட, விஸ்வாசம் தமிழகத்தின் மொத்த வசூல் விபரம் இதோ
    பேட்ட, விஸ்வாசம் தமிழகத்தின் மொத்த வசூல் விபரம் இதோ
  • ‘தேவ்’ படத்தின் தமிழக வசூல் இதுதான்
    ‘தேவ்’ படத்தின் தமிழக வசூல் இதுதான்
  • சபாநாயகருக்கு எதிராக நடவடிக்கை – சிசிர ஜயகொடி
    சபாநாயகருக்கு எதிராக நடவடிக்கை – சிசிர ஜயகொடி
  • புத்தளத்தை சென்றடைந்த சாதனைப் பயணி கொழும்புக்கான பயணத்தை ஆரம்பித்தார்
    புத்தளத்தை சென்றடைந்த சாதனைப் பயணி கொழும்புக்கான பயணத்தை ஆரம்பித்தார்
  • 14வது வாரமாகவும் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு!
    14வது வாரமாகவும் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு!
  • அரசாங்கம் பொறுப்புக்கூறியே ஆகவேண்டும் – ரணிலின் கருத்துக்கு ஜனநாயக போராளிகள் கட்சி பதில்
    அரசாங்கம் பொறுப்புக்கூறியே ஆகவேண்டும் – ரணிலின் கருத்துக்கு ஜனநாயக போராளிகள் கட்சி பதில்
  • காதல் மனைவியுடன் காதலர் தினம் – ஹரி செலவிட்ட பணம் எவ்வளவு தெரியுமா?
    காதல் மனைவியுடன் காதலர் தினம் – ஹரி செலவிட்ட பணம் எவ்வளவு தெரியுமா?
  • கிராம மக்களின் வறுமை நிலை குறைவடைந்து வருகிறது – Hartwig Schafer
    கிராம மக்களின் வறுமை நிலை குறைவடைந்து வருகிறது – Hartwig Schafer
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.