News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • விமான விபத்தில் சிக்கி உயிரிழந்த சலாவின் இறுதிப்பயணம்!
  • பங்களாதேஷில் 200-க்கும் மேற்பட்ட குடிசைகள் தீக்கிரை – 8 பேர் உயிரிழப்பு!
  • யூதர்களுக்கு எதிரான செயற்பாடு – மக்ரோன் கடும் கண்டனம்
  • தேசிய அரசாங்கம் அமைப்பதில் சிக்கல்..!
  • உலக அமைதி வேண்டி கனடா சுற்றுலாப் பயணிகள் இந்தியாவில் யாகம்
  1. முகப்பு
  2. கிாிக்கட்
  3. டக்வொர்த்-லூயிஸ்-ஸ்டெர்ன் விதிமுறையில் திருத்தம் – ICC அறிவிப்பு!

டக்வொர்த்-லூயிஸ்-ஸ்டெர்ன் விதிமுறையில் திருத்தம் – ICC அறிவிப்பு!

In கிாிக்கட்     September 30, 2018 3:41 am GMT     0 Comments     1893     by : ஜெயச்சந்திரன் விதுஷன்

மேம்படுத்தப்பட்ட டக்வொர்த்-லூயிஸ்-ஸ்டெர்ன் விதிமுறை (DLS) இன்று முதல் அமலுக்கு வருவதாக சர்வதேச கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ICC) மேற்கொண்டிருக்கும் இந்த திருத்தம் இன்று நடைபெறும் (ஞாயிற்றுக்கிழமை) தென் ஆப்பிரிக்கா மற்றும் சிம்பாவே அணிகள் இடையே கிம்பரலேயில் நடக்கும் ஒருநாள் போட்டியிலிருந்து அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டக்வொர்த் லீவிஸ் முறையின் 3 ஆவது பதிப்பு கடந்த 2014ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து இரண்டாவது முறையாக திருத்தம் செய்யப்படுகிறது.

தற்போதைய முறையில் கடந்த நான்கு ஆண்டுகளில் விளையாடப்பட்ட ஒருநாள் மற்றும் T-20 போட்டிகளில் ஒவ்வொரு பந்திலும் எடுக்கப்படும் ஓட்டங்கள் கணக்கில் கொள்ளப்படுகிறது. அதாவது 700 ஒருநாள் மற்றும் 428, T-20 போட்டிகள் இந்த எல்லைக்குள் வருகின்றன.

புதிய திருத்தத்தில் அணிகள் ஒருநாள் போட்டியின் கடைசி ஓவர்களில் வேகமாக ஓட்டங்களை குவிப்பதால் ஓட்ட சராசரி உயர்ந்துள்ளது எனக் குறிப்பிடுகிறது.

இதன் மூலம் ஒருநாள் மற்றும் T-20 ஆகிய இரண்டு விதமான போட்டிகளிலும் இறுதி ஓவர்களில் ஓட்டங்கள் குவிப்பு விகிதம் மாறுவது தெளிவாகத் தெரிகிறது.

இதனால் ஒருநாள் போட்டிகளில் கடைசி 20 ஓவர்கள் மற்றும் T-20 போட்டிகள் ஆகிய இரண்டுக்குமே பொருந்தும் வகையில் டக்வொர்த் லீவிஸ் முறை திருத்தப்பட்டுள்ளது. ஆண்கள் மற்றும் பெண்கள் கிரிக்கெட் இரண்டுக்கும் இந்த மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.

தரம் 3 விதிமீறிலுக்கு வழங்கப்படும் சஸ்பெண்ட் புள்ளிகள் 8 லிருந்து 12ஆக உயர்ந்தப்பட்டுள்ளது. (6 டெஸ்ட் போட்டிகள் அல்லது 12 ஒருநாள் போட்டிகளுக்கு இணையானது)

தரம் 1, 2 மற்றும் 3 விதிமீறல்களை போட்டி நடுவர் (Match referee) விசாரித்து நடவடிக்கை எடுப்பார். தரம் 4 விதிமீறல்கள் மட்டும் நீதித்துறை ஆணையர் ஒருவரால் விசாரிக்கப்படும்.

இந்த மாற்றங்கள் கடந்த ஜூலை 2ஆம் திகதி டப்ளின் நகரில் நடந்த ஆண்டுக் கூட்டத்திலேயே உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

உலகக் கோப்பை தொடருக்கு இன்னும் ஓராண்டுக்குக் குறைவாகவே இருக்கும் நிலையில் ஆடுகளம் குறித்த விதிகளில் சிறிய மாற்றம் மட்டுமே செய்யப்பட்டிருக்கிறது.

உட்பிரிவு 11.4, 11.7 மற்றும் 12.8 ஆகியவற்றில் செய்யப்பட்ட திருத்தங்கள் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளை குறிப்பிட்ட அவகாசத்திற்கு முன்பே முடித்துக்கொள்ள அனுமதி வழங்குகிறது.

ஆடுகளத்தில் எல்லை கொடுக்கல் பிட்ச் மையத்திலிருந்து அதிகபட்சம் 90 M வரையே இருக்கலாம் என்ற விதி உள்ளது. இதே போல ஆடுகளத்தின் எல்லையிலிருந்து 10 கெஜம் இடைவெளியைத் தாண்டி எல்லை கூடுகள் இருக்கக் கூடாது என உட்பிரிவு 19ல் மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தம் குறிப்பிடுகிறது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • ஐ.சி.சி. ஒருநாள் தரவரிசை – ஸ்மிரிதி மந்தனா முதலிடம்!  

    ஐ.சி.சி. ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பெண்கள் துடுப்பாட்ட தரவரிசையில் இந்தியாவின் ஆரம்ப துடுப்பாட்ட

  • ஐ.சி.சி.யின் முக்கிய மூன்று விருதுகளை வென்று அசத்திய கோலி  

    2018 ஆம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் வீரர், சிறந்த ஒருநாள் வீரர் மற்றும் ஆண்டின் சிறந்த வீரர் ஆகிய சர்வதேச

  • ‘ஸ்ரீலங்கா கிரிக்கெட்’ தேர்தலைப் பிற்போட ஐ.சி.சி அனுமதி  

    இலங்கைக் கிரிக்கெட் சபையின் தேர்தலை பிற்போடுவதற்கு விளையாட்டுத்துறை அமைச்சு எடுத்துள்ள தீர்மானத்திற்

  • இலங்கையின் நற்பெயருக்கு களங்கம் – அர்ஜூன கவலை!  

    சர்வதேச கிரிக்கெட் சபை இலங்கையில் ஊழல் ஒழிப்பு அலுவலகத்தை அமைப்பதானது இந்நாட்டின் நற்பெயருக்கு களங்க

  • அம்பத்தி ராயுடுவின் பந்துவீச்சு தொடர்பாக முறைப்பாட்டிற்கு நடவடிக்கை!  

    இந்திய அணி வீரர் அம்பத்தி ராயுடுவின் பந்துவீச்சு தொடர்பாக வழங்கப்பட்ட முறைப்பாடு தொடர்பில் 14 நாட்கள


#Tags

  • DSL
  • Duckworth-Lewis-Stern
  • Duckworth-Lewis-Stern system
  • icc
    பிந்திய செய்திகள்
  • விமான விபத்தில் சிக்கி உயிரிழந்த சலாவின் உடல் நல்லடக்கம்
    விமான விபத்தில் சிக்கி உயிரிழந்த சலாவின் உடல் நல்லடக்கம்
  • பங்களாதேஷில் 200-க்கும் மேற்பட்ட குடிசைகள் தீக்கிரை – 8 பேர் உயிரிழப்பு!
    பங்களாதேஷில் 200-க்கும் மேற்பட்ட குடிசைகள் தீக்கிரை – 8 பேர் உயிரிழப்பு!
  • யூதர்களுக்கு எதிரான செயற்பாடு – மக்ரோன் கடும் கண்டனம்
    யூதர்களுக்கு எதிரான செயற்பாடு – மக்ரோன் கடும் கண்டனம்
  • உலக அமைதி வேண்டி கனடா சுற்றுலாப் பயணிகள் இந்தியாவில் யாகம்
    உலக அமைதி வேண்டி கனடா சுற்றுலாப் பயணிகள் இந்தியாவில் யாகம்
  • தென்மாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் திடீர் இடமாற்றம்
    தென்மாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் திடீர் இடமாற்றம்
  • ட்ரம்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு – ஜப்பான் பரிந்துரை
    ட்ரம்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு – ஜப்பான் பரிந்துரை
  • நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேலிக் கூத்தாக்கப்பட்டுள்ளனர்: ரஞ்சன்
    நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேலிக் கூத்தாக்கப்பட்டுள்ளனர்: ரஞ்சன்
  • வடகொரிய தலைநகரில் கண்கவர் மலர்க்கண்காட்சி!
    வடகொரிய தலைநகரில் கண்கவர் மலர்க்கண்காட்சி!
  • இலங்கை அணியின் வெற்றியைக் கொண்டாடிய முன்னாள் வீரர் – தமிழில் டுவிட்
    இலங்கை அணியின் வெற்றியைக் கொண்டாடிய முன்னாள் வீரர் – தமிழில் டுவிட்
  • பல்கேரியா – இந்தியா உறவுகளை மேம்படுத்துவைத்து குறித்து முக்கிய ஆலோசனை!
    பல்கேரியா – இந்தியா உறவுகளை மேம்படுத்துவைத்து குறித்து முக்கிய ஆலோசனை!
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.