டன்ஃபோர்ட்டில் இரு ஆண்கள் மீது கத்திக்குத்து – பெண்ணொருவர் கைது!
In கனடா January 2, 2019 12:50 pm GMT 0 Comments 1352 by : ஜெயச்சந்திரன் விதுஷன்

டன்ஃபோர்ட் கிழக்கு முடிவு பகுதியில் இரு ஆண்கள் மீது கத்தியால் குத்திய சம்பவம் தொடர்பில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிரதான வீதி மற்றும் டன்ஃபோர்ட் அவென்யூ பகுதியில் நேற்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 2 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றதை அடுத்து அங்கு அவரச மருத்துவ பிரிவினர் அழைக்கப்பட்டனர்.
இந்த சம்பவத்தில் 50 வயதுடைய நபர் கழுத்து மற்றும் கையில் கத்தி குத்துக்கு இலக்காகியிருந்தார். மேலும் 20 வயதுடைய ஒருவரும் வயிறு மற்றும் கையில் கத்தி குத்துக்கு இலக்காகி இருந்தார்.
இருப்பினும் அவர்களுக்கு உயிராபத்து இல்லை என தெரிவித்த பொலிஸார், கத்திக்குத்து தாக்குதலை நடத்திய பெண்ணை கைது செய்துள்ளதாகவும் கைது செய்யப்பட்டவர் 30 வயதுடையவர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் கைது செய்யப்பட்டவர் மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பொலிஸார் தகவல் எதனையும் வெளியிடாத நிலையில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.