டார்பிஷையர் இரட்டைக் கொலை : குற்றவாளி நீதிமன்றுக்கு கொண்டுவரப்படவுள்ளார்
In இங்கிலாந்து January 3, 2020 10:34 am GMT 0 Comments 2372 by : S.K.Guna

புத்தாண்டு தினத்தன்று டார்பிஷையரில் உள்ள ஒரு வீட்டில் பெண்ணொருவரையும் அவருடன் இருந்த ஆண் நபரையும் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டவர் விசாரணைகளுக்காக நீதிமன்றுக்கு கொண்டுவரப்படவுள்ளார்.
உயிரிழந்த பெண்ணைவிட்டுப் பிரிந்திருந்த கணவர் ரீஸ் ஹான்கொக் என்ற நபரே இந்தக் கொலைகளைச் செய்துள்ளதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார். நேற்று வியாழக்கிழமை அவர் மீது இரட்டைக் கொலைக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
போர்ட்லன்ட் வீதி, எற்வலைச் சேர்ந்த 39 வயதான ரீஸ் ஹான்கொக் இன்று வெள்ளிக்கிழமை தெற்கு டார்பிஷையர் மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
39 வயதான ஹெலன் ஹான்கொக் மற்றும் அவருடன் 6 மாதங்கள் தொடர்பிலிருந்த 48 வயதான மார்ட்ரின் கிரிஃபித்ஸ் ஆகியோரே கத்திக்குக்கு இலக்காகி உயிரிழந்தனர்.
நன்றி bbc.co.uk
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.