டென்மார்க்கில் கொவிட்-19 தொற்றினால் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

டென்மார்க்கில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால், ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஒரு இலட்சத்து 489பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 70ஆவது நாடாக விளங்கும் டென்மார்க்கில், இதுவரை கொரோனா வைரஸ் தொற்றினால் 918பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், மூவாயிரத்து 132பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்;. 14பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 23ஆயிரத்து 907பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 40பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
இதுதவிர வைரஸ் தொற்றிலிருந்து 75ஆயிரத்து 664பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.