டென்மார்க்கில் கொவிட்-19 தொற்றினால் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

டென்மார்க்கில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, டென்மார்க்கில் கொவிட்-19 தொற்றினால் இரண்டாயிரத்து 10பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 55ஆவது நாடாக விளங்கும் டென்மார்க்கில், இதுவரை ஒரு இலட்சத்து 95ஆயிரத்து 296பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 625பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டதோடு 27பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 12ஆயிரத்து 205பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 123பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அத்துடன் இதுவரை ஒரு இலட்சத்து 81ஆயிரத்து 81பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.