தடைசெய்யப்பட்ட தௌஹீத் ஜமாத் அமைப்புக்கும் எனக்கும் தொடர்பில்லை: கிழக்கு ஆளுநர்
தடைசெய்யப்பட்டுள்ள தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்புக்கும் தனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார்.
திருகோணமலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
மேலும், இதுவரை இடம்பெற்ற தாக்குதல்களுடன் தொடர்புடைய தாக்குதல்தாரிகளுக்கும் தனக்கும் தொடர்பில்லை எனவும், அவ்வாறானவர்கள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தனக்கு ஆதரவாக செயற்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
அத்துடன், இந்த விடயத்தில் தன் மீது சந்தேகங்கள் ஏற்பட்டால், எந்நேரத்திலும் விசாரணைக்கு ஒத்துழைக்கத் தான் தயாராகவே இருப்பதாகவும் அவர் கூறினார்.
மேலும் தமது பாதுகாப்புக்கு இருக்கும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் பெட்டியில் இருந்தே 40 ரவைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.