தந்தையால் மகன் அடித்துக் கொலை: இருவர் கைது!
In இலங்கை March 9, 2018 5:56 am GMT 0 Comments 1611 by : Ravivarman

பொகவந்தலாவ, பொகவான தோட்டத்தில் தந்தை ஒருவர் மகனைப் பொல்லால் அடித்துக் கொலை செய்த சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் நேற்றிரவு (வியாழக்கிழமை) சந்தேகத்தின் பேரில் தந்தை மற்றும் மருமகன் ஆகிய இருவருமே கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவத்தில் உயிரிழந்தவர் 38 வயதான ஆறுமுகன் சிவசூரியன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மதுபோதையில் தந்தைக்கும் மகனுக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலையிலேயே மகன் பொல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேற்கொண்ட ஆரம்ப விசாரணையின் மூலம் வெளியாகியுள்ளது.
உயிரிழந்த நபர் மூன்று பிள்ளைகளின் தந்தை என்றும், மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும், தினந்தோறும் மது அருந்திவிட்டு சண்டையிடுவதாகவும் பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை ஹற்றன் கைரேகை அடையாளப்பிரிவு மற்றும் பொகவந்தலாவ பொலிஸார் ஆகியோர் இணைந்து முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.