தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறிய மேலும் 37பேர் கைது
In இலங்கை December 18, 2020 3:27 am GMT 0 Comments 1302 by : Yuganthini

கடந்த 24மணித்தியாலங்களில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 37பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளியை பேணாமை ஆகிய தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நடைமுறையிலுள்ள தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறி செயற்படுபவர்கள் எவராயினும் கைது செய்யப்படுவார்கள் எனவும் அஜித் ரோஹண எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அதேபோன்று அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஒக்டோபர் மாதம் 30ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் குறித்த குற்றச்சாட்டுக்களுக்கமைய 1562 பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.