தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 126 நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு
In இலங்கை January 19, 2021 3:45 am GMT 0 Comments 1403 by : Dhackshala

மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 126 அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகபொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
மேல் மாகாணத்தில் நேற்றைய தினம் (திங்கட்கிழமை) 1004 அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன எனவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டார்.
இவ்வாறு சோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிறுவனங்களில் 848 நிறுவனங்கள் சுகாதார அறிவுறுத்தல்களுக்கு அமைய செயற்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.